Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ. 491 கோடி செலவில் 81 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு இலவச பை, காலணி : ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு அழகிய வடிவமைப்புடன் கூடிய பை, காலணிகளை வழங்க 491 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பள்ளி மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். இதுவரை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள், சைக்கிள் ஆகியவை மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.

ஆனால், இந்த நடப்பு ஆண்டில் இவற்றுடன் கூடுதலாக இலவச லேப்-டாப், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை, காலணி, கலர் பென்சில், ஜியாமெட்ரிக் பாக்ஸ், அட்லஸ் ஆகியவையும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நலத்திட்டங்களும் அனைவரையும் சிறு குறைகூட இல்லாமல் சென்றடைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார்.

81 லட்சம் பேருக்கு அழகிய காலணி

இதைத்தொடர்ந்து, நலத்திட்டங்கள் வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பணியும் தனித்தனி துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அட்லஸ் தயாரித்து வழங்கும் பொறுப்பு தமிழ்நாடு பாடநூல் கழகத்திடமும், காலணி, கலர் பென்சில் வழங்கும் பொறுப்பு தொடக்கக்கல்வி இயக்குனரகத்திடமும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஒவ்வொரு நலத்திட்டம் தொடர்பான டெண்டர் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இலவச காலணியைப் பொருத்தவரையில் ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.94 கோடியே 76 லட்சத்தை ஒதுக்கியது.

81 லட்சம் பேருக்கு காலணிகள் என்றவுடன் குறிப்பிட்ட நான்கைந்து அளவுகளில் தயாரித்து ஒட்டுமொத்தமாக வழங்கிவிடுவார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அப்படி வழங்கினால் ஒரு மாணவருக்கு அளவு பெரிதாக இருக்கும். மற்றொருவருக்கு அளவு சற்று சிறிதாக இருக்கும். அப்படி நடந்துவிடக்கூடாது என்பதால் ஒவ்வொரு மாணவ-மாணவிக்கும் தனித்தனியே அளவு எடுத்து வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாணவ-மாணவிக்கும் தனித்தனியே பாதத்தின் அளவு எடுத்து காலணிகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வெளீர் பிரவுன் நிறம், அடர்த்தியான பிரவுன் நிறம், சாம்பல் நிறம் என 3 வண்ணங்களில் காலணிகள் வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் மாணவர்களின் அளவு எடுக்கப்பட்டு மொத்தமாக தொடக்கக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்படும். இப்படி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து வரும் அனைத்து அளவுகளும் பதிவுசெய்யப்பட்டு, அதன் அடிப்படையில் வெவ்வேறு அளவுகளில் அதற்கான குறிப்பிட்ட எண்ணிக்கையில் காலணிகள் தயாரித்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+