குடியரசுத் தலைவர் தேர்தல்: சங்மாவை ஆதரிக்க பாஜக முடிவு- கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக அப்துல்கலாமை நிறுத்துவதற்கு பெரும் பிரயத்னம் செய்து பார்த்தது. இந்த முயற்சி கைகூடவில்லை. இதையடுத்து என்ன செய்வது என்று கை பிசைந்து கொண்டிருந்தது பாஜக. சிவசேனாவோ பிரணாப்தான் என்பதில் உறுதியாக இருக்கிறது. பாஜகவின் மேனகா காந்தியும் கூட வெளிப்படையாகவே பிரணாப்பை ஆதரிக்கலாம் என்றார்.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்திருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுப்பிரமணியன் சாமி திடீரென சந்தித்துப் பேசியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் பேசிவரும் பாஜக தலைமை பி.ஏ.சங்மாவை ஆதரிக்கலாம் என்று கூறிவருகிறது.
இது தொடர்பாக மமதா பானர்ஜியுடனும் பாஜக பேசிவருவதாகக் கூறப்படுகிறது.
சங்மாவை ஆதரிப்பதன் மூலம் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற்த் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், அதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளை தமது அணியில் இணைத்துக் கொள்ள முடியும் என்பதுதான் பாஜகவின் ஒரே கணக்கு என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications