பாகிஸ்தான் பிரதமர் கிலானி பதவி பறிப்பு, புதிய பிரதமர் மக்தூம் சகாபுத்தீன்?

பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு கடநத் ஏப்ரல் மாதம் 26ம் தேதி வந்தது. அந்த நாளில் இருந்து அவர் பிரதமராக இருக்கும் தகுதியை இழந்துவிட்டார் என்று நேற்று தெரிவித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், இது குறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு அந்நாட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கிலானியின் பிரதமர் பதவி பறிபோகிறது. இந்நிலையில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், அந்நாட்டு அதிபருமான ஆசிப் அலி சர்தாரியின் தலைமையில் இன்று அதிகாலை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட அவசரக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் மக்தூம் சகாபுத்தீனை அடுத்த பிரதமராக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பிரதமரை தேர்வு செய்ய வசதியாக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபையை நாளை கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
புதிய பிரதமர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மதியம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிலானியின் பதவியை பறிக்கக் கூறிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து எதுவும் செய்ய வேண்டாம் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்கள் சர்தாரியை அறிவுறுத்தியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
சர்தாரி உள்பட பல தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கிலானி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தான் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இறுதியில் பதவி பறிபோயுள்ளது என்பது குறி்ப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications