For Daily Alerts
Just In
துப்பே கிடைக்காத ராமஜெயம் கொலை வழக்கு- சிபிசிஐடிக்கு மாற்றம்
கே.என். ராமஜெயம் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். எதற்காக ராமெஜயம் கொலை செய்யப்பட்டார்? யார் கொலை செய்தது? என்பது போன்ற விவரங்கள் எதுவுமே மாதங்கள் உருண்டோடிவிட்டன.
கடந்தவாரம் கூட இலங்கையின் முக்கிய புள்ளி ஒருவருக்குத் தொடர்பிருக்கிறது..கொலையாளிகளை நெருங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது. போலீசாருக்கே தெரியாமல் தனிப்படை அமைக்கப்பட்டு ரகசியமாகவே விசாரணை நடத்தப்பட்டது என்றெல்லாம் கூறப்பட்டது.
இன்னொருபுறத்தில் இந்த கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
இனிமேலாவது ராமஜெயம் கொலை வழக்கில் ஏதேனும் முன்னேற்றம் கிடைக்குமா? என எதிர்பார்க்கலாம்.
Comments
English summary
The Ramajayam murders case trasferred to the Crime Branch CID for further investigation.
Story first published: Thursday, June 21, 2012, 17:22 [IST]