பிரணாப் முகர்ஜியை என்.ஆர். காங்கிரஸ் ஆதரிக்கும்: புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Pranabh Mukherjee and Rangasamy
புதுச்சேரி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் தலைவரும், புதுச்‌சேரி முதல்வருமான ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சீரிய தலைமை மற்றும் வழிகாட்டுதலின் பேரிலும், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலும் சிறப்பாக இயங்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். பிரணாப் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவர் ஒரு மூத்த தலைவர். பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர். நிதியமைச்சராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். அத்தகையவருக்கு புதுவை அரசும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் ஆதரவாக இருக்கும். அதே சமயம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சங்மா எங்களிடம் ஆதரவு கோரவில்லை.

எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது எப்பொழுதுமே மதிப்பும், மரியாதையும் உண்டு என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+