அரிசி விலையில் கிடுகிடு உயர்வு! தமிழக மக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் அரிசிகளின் விலை கடுமையான உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் இட்லி அரிசி கிலோ ரூ.20 என்றும், பொன்னி அரிசி ரூ.25 என்றும் விற்கப்பட்டது. ஆனால் தற்போது பொன்னி அரிசி ரூ.45 என்று விற்கப்படுகிறது. அதேபோல ரூ.45க்கு விற்கப்பட்ட பாசுமதி அரிசி, தற்போது ரூ.80க்கு விற்கப்படுகிறது.
மேலும் வெள்ளை பொன்னி அரிசி ரூ.38க்கும், பாவர்ட்லா பொன்னி அரிசி ரூ.35க்கும் சிகப்பு பொன்னி ரூ.32க்கும் விற்கப்படுகிறது. புழுங்கல் அரிசி இப்படி என்றால், பச்சரிசி கிலோ ரூ.29க்கு விற்கப்படுகிறது. இதனால் அரிசி வாங்க மளிகை கடைகளுக்கு வரும் மக்கள் இடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சென்னையை சேர்ந்த அரிசி வியாபாரிகள் சிலர் கூறியதாவது,
இந்த ஆண்டு தமிழகத்தில் மழை குறைவால் அரிசி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசியை கடைகளுக்கு கொண்டு செல்லும் வாகனங்களுக்கான கூலி கடுமையாக உயர்ந்துள்ளது. லாரி ஓட்டுநர்களை கேட்டால், டீசல் விலை உயர்வை கை காட்டுகின்றனர்.
இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கிறது. அரிசி மூட்டைகளை மொத்தமாக பதுக்கும் சிலர், வெளிநாடுகளுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் தமிழகத்தில் அரிசி விலை உயர்வு தவிர்க்க முடியாமல் உள்ளது.
எனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசியை தடுத்து நிறுத்தி, உள்நாட்டில் அரிசி விலையை குறைக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications