தமிழகத்தில் 12 புதிய ரயில்கள் இயக்கப்படும்- தென்னக ரயில்வே அறிவிப்பு!

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
திருச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு மதுரை வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல்-பெங்களூர் இடையே டபுள் டெக்கர் ஏ.சி புதிய ரயில் இயக்கப்பட உள்ளது.
நெல்வேலியில் இருந்து தாதருக்கு கோவை, மங்களூர் வழியாக புதிய ரயிலும், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படும்.
மன்னார்குடியில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் புதிய ரயில் இயக்கப்படும்.
மதுரையில் இருந்து ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக காச்சிகேடாவுக்கு ஞாயிறு தோறும் புதிய ரயில் இயக்கப்படும்.
ஈரேட்டில் இருந்து கோவை வழியாக பாலக்காடுக்கு தினசரி ரயிலும், மன்னார்குடியில் இருந்து திருப்பதிக்கு வாரம் 3 முறை ரயிலும் இயக்கப்படும்.
விழுப்புரத்தில் இருந்து காட்பாடிக்கு தினமும் 3 ரயில்களும், மன்னார்குடியில் இருந்து திருச்சி வழியாக மானாமதுரைக்கு தினசரி ரயிலும் இயக்கப்படும்.
பெங்களூரு-சேலம் ரயில், நாகூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி-மதுரை இடையே வாரம் இருமுறை இயக்கப்பட்டு வந்த ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதிக்கு வியாழன், சனிக்கிழமை அன்று ராமேஸ்வரத்தில் இருந்து ரயில் புறபட்டு செல்லும்.
திருச்சி- நாகூர் தினசரி இயக்கப்படும் ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஆனால் புதிய ரயில்கள் இயக்கப்படும் தேதி பின்பு அறிவிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications