ராஜினாமவை வாபஸ் வாங்குங்க...: எதியூரப்பா ஆதரவு அமைச்சர்களுக்கு பாஜக மேலிடம் வேண்டுகோள்
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவை மாற்றக் கோரி ராஜினாமா செய்துள்ள எதியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் தங்களது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளரான தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சதானந்த கவுடாவை மாற்றியே தீர வேண்டும் என்பதில் எதியூரப்பா ஆதரவாளர்கள் உறுதியாக இருக்கின்றனர். சதானந்தாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 8 அமைச்சர்கள் நேரில் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். மேலும் இருவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இதேபோல் எதியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதற்குப் போட்டியாக சதானந்தகவுடாவை மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி ராஜினாமா செய்வோம் என்று அவரது ஆதரவு அமைச்சர்கள் மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து பாஜக மேலிடம் சார்பில் தர்மேந்திர பிரதான் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் இருதரப்பிடமும் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ள அமைச்சர்கள் தங்களது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications