மத்திய பிரதேசத்தில் பாலியல் வன்முறைகள் அதிகம்: அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட 53 மெகா நகரங்களில் 2011-ல் பதிவான குற்றங்கள் அடிப்படையில், டெல்லியில்தான் திட்டமிட்ட வன்முறைகள் (10 சதவிகிதம்) அதிகம் நடந்துள்ளன.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மேற்கு வங்காளத்தில் அதிகமாக உள்ளன. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவிகிதம் மக்கள் தொகையை கொண்டிருக்கும் ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் பங்கு 12.4 சதவிகிதம் ஆகும்.
மத்திய பிரதேச மாநிலம், கற்பழிப்புகளின் தலைநகரமாக விளங்குகிறது. 2007 ம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டுவரை மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் 15 ஆயிரத்து 275 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் பதிவான பாலியல் வன்முறை வழக்குகளில் 14.1 சதவிகிதம் ஆகும். அதேபோல் மேற்கு வங்கத்தில் 11 ஆயிரத்து 427 வழக்குகள் பதிவாகியுள்ளன.
உத்திரபிரதேசத்தில் 8,834 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 7,703 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேசமயம் 2011 ம் ஆண்டு மட்டும் புது டெல்லியில் 568 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2010 ஆண்டை விட அதிகமாகும்.மேலும்ஆந்திராவில் பாலியல் வன்முறைகள் அதிகளவில் நடைபெற்றுள்ளன.
தினமும் சராசரியாக தற்கொலை செய்து கொள்பவர்கள் மற்றும் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1442 ஆகும். ரெயில் மற்றும் சாலை விபத்துக்களில் தினமும் 452 பேர் பலியாகின்றனர். 1,298 பேர் காயமடைகின்றனர். தினமும் 372 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் குடும்ப தலைவிகள்.
கடந்த 2011-ல் இந்தியா முழுவதும் 62.5 லட்சம் குற்றங்கள் பதிவாகின. இதில் 3-ல் ஒரு பங்கு உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளன. மெகா நகரங்களில் திட்டமிட்ட குற்றங்கள் நடைபெற்றதில் டெல்லி முதலிடம் வகிக்கிறது. கடுமையான குற்றங்கள் என்ற பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
அதேபோல் 2007 முதல் 2011 ம் ஆண்டு வரை 18 முதல் 30 வயதுடைய 75 ஆயிரத்து 257 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 முதல் 45 வயது வரை உடைய 38 ஆயிரத்து 845 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தேசிய குற்றப் பதிவேடுகள் ஆணையத்தின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications