51 எம்.எல்.ஏக்கள் என்னை முதல்வராக்க ஆதரிக்கிறாங்க..: பட்டியலை வெளியிட்டார் ஷெட்டர்
பெங்களூர்: கர்நாடக ஆளும் பாரதிய ஜனதாவில் பூதாகரமாக வெடித்துள்ள கோஷ்டி மோதலால் முதல்வர் சதானந்த கவுடா தரப்பும் முன்னாள் முதல்வர் எதியூரப்பா தரப்பும் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.
எதியூரப்பாவின் ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டர் இல்லத்தில் இன்று காலை ஆதரவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே 8 அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்ட நிலையில் இன்றைய கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் அதிரடியாக ஜெகதீஷ் ஷெட்டர் ஒரு பட்டியலை வெளியிட்டார். தம்மை ஆதரிக்கும் 51 எம்.எல்.ஏக்களின் பெயர் அதில் இடம்பெற்றிருந்தது. மேலும் தம்மை ஆதரிக்கும் எம்.பிக்கள் பட்டியலையும் அவர் வெளியிட்டார். கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 120. தற்போது 51 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்துவிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாஜக மேலிட அழைப்பை ஏற்று முதல்வர் சதானந்த கவுடா டெல்லி சென்றிருக்கிறார். இந்நிலையில் எதியூரப்பா கோஷ்டியானது வரும் 5-ந் தேதிக்குள் புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை நியமிக்க வேண்டும் என்று கெடுவிதித்துள்ளதாகவும் இல்லையெனில் கூண்டோடு ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்த்ள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications