ஊழல்வாதியான பிரணாப் முகர்ஜியின் மனுவை நிராகரிக்க காந்தீய மக்கள் இயக்கம் கோரிக்கை
சென்னை: ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்துள்ள வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று காந்தீய மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அந்த இயக்கத்தின் தலைமை நிலையச் செயலாளர் இனியன் கூறியதாவது:
இந்தியாவின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கு ஊழல் புகாரில் சிக்கிய பிரணாப்முகர்ஜி போட்டியிடுகிறார். இந்த உயரிய பதவியில் ஊழல் புகார் இல்லாதவர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்று குடியரசு தலைவர் தேர்தல் சட்டம் 1952-ன் கீழ் பிரிவு 5ஏ மற்றும் 5இ குறிப்பிடுகிறது.
பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு சட்ட விரோதமானதாகவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாகவும் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க கோரி குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். அவர் பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை நிராகரிக்கா விட்டால் உச்சநீதிமன்றத்தில் அவரது மனுவை நிராகரிக்க கோரி வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications