நல்ல மாட்டுக்கு ஒரு சூடு... கருணாநிதி

திமுக சார்பில் இன்று நடந்த சிறை நிரப்பும் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கருணாநிதியை சந்தித்துக் கேட்டனர். இந்தப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு மிகப் பிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது என்றார் கருணாநிதி.
மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: திமுக அறப் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றி கிடைத்திருப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: உண்மையைச் சொன்னதற்காக நன்றி.
கேள்வி: தமிழக அரசின் காவலர் துறையினர் போராட்டத்தில் ஈடுபடவந்திருப்பவர்களை எல்லாம் பயமுறுத்துவதைப் போலப் பேசுகிறார்களே?
கருணாநிதி: எதிர்பார்த்தது தான்.
கேள்வி: எழுச்சி எவ்வாறு உள்ளது?
கருணாநிதி: எதிர்பார்க்காத அளவிற்கு உள்ளது. மிகப் பிரமாண்டமான அளவிற்கு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.
கேள்வி: அடுத்த கட்டப் போராட்டம் என்ன?
கருணாநிதி: இந்தக் கட்டம் முதலில் முடியட்டும்.
கேள்வி: தமிழக அரசின் நிலை மாறுமா?
கருணாநிதி: நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்று ஒரு பழமொழி சொல்வார்கள். கலந்து கொள்வோரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப் போகிறோம். வேறு மாநில சிறைச் சாலைகளிலே வைக்கப் போகிறோம், கர்நாடகத்திற்கும், ஆந்திராவில் ஹைதராபாத்திற்கும் கொண்டு போகப்போகிறோம் என்றெல்லாம் அச்சுறுத்திப் பார்த்தார்கள். ஆனால் யாரும் பயப்படவில்லை. யாரும் கவலைப்படுவதாகவும் இல்லை.
கேள்வி: அதிமுக ஆட்சியினர் இந்தப் போராட்டத்திற்குப் பிறகு திருந்தி விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?
கருணாநிதி: திருந்துவார்கள் என்று நம்பவில்லை. ஏனென்றால் அண்ணாவையே கைவிட்டவர்கள் அவர்கள். அண்ணா அவர்களின் பெயரால் உள்ள நூலகம் உலகத் தரத்தோடு கட்டப்பட்டது. அறிஞர்களாலும், சான்றோர்களாலும் வியந்து பாராட்டப்பட்டது. அந்த நூலகத்தை இழிவுபடுத்த வேண்டும், ஆபாசப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திருமணங்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள். எனவே இந்த ஆட்சியினர் திருந்துவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார் கருணாநிதி.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications