சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப். தாக்குதலில் அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தால் வருத்தமடைகிறேன்: ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

P Chidambaram
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சி.ஆர்.பி.எப். வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையின் போது அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் மிகவும் வருந்துவதாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் அண்மையில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 200 பேர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்டுகள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்பாவி குழந்தைகளும் பெண்களும்தான் கொல்லப்பட்டதாகவும் வீடுகளின் வெளியே பொது இடத்தில் ஒன்று கூடியிருந்த அப்பாவிகள் மீதெ தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இதை உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏவும் உறுதி செய்திருந்தார். மேலும் மனித உரிமை ஆர்வலர்களான பிடி சர்மா, சுவாமி அக்னிவேஷ், நீதிபதி சசார் ஆகியோர் அடங்கிய குழு நாளை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளது.

இதனிடையே சி.ஆர்.பி.எப். வீரர்களா அப்பாவி பழங்குடிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இது தொடர்பாக பிரதமரிடம் முறையிடப் போவதாகவும் மத்திய பழங்குடிகள் நலத்துறை அமைச்சர் கிஷோர் சந்திர தேவ் கூறியிருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் உயிரிழந்திருந்தால் உண்மையில் மிகவும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாவோயிஸ்டுகள் பழங்குடிமக்களை மனித கேடயமாக பயன்படுத்துகின்றனர் என்பதற்கு இது ஒரு உதாரணமும் கூட என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+