இந்தியா அணு ஆயுதங்களைத் தயாரித்தது ஏன்?: அப்துல் கலாம்

இந்தியாவின் ஏவுகணை, ராக்கெட் மற்றும் அணு ஆயுதத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற விஞ்ஞானியான கலாம் 33-வது ஆசிய பசிபிக் ஒருங்கிணைந்த ஊரக மேம்பாடு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க வங்கதேசத் தலைநகர் டாக்கா வந்தார்.
அங்கு பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: இப்போது தெற்கு ஆசிய மண்டலத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் நீங்கள், இந்தியாவின் அணு ஆயுதம் மற்றும் தொலை தூர ஏவுகணைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகித்தீர்கள். அதற்காக இப்போது வருத்தப்படுகிறீர்களா?
கலாம்: இந்தியாவைச் சுற்றியுள்ள பெரிய நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இந்நிலையில், அதிகாரச் சமநிலையை எட்டுவதற்கு நாமும் அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் வைத்திருப்பது அவசியமாக உள்ளது.
இந்தியா அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை முதலில் தாக்குதலுக்குப் பயன்படுத்தாது. பிற நாடுகள் தாக்கினால்தான் அதைப் பயன்படுத்தும்.
கேள்வி: ஏவுகணைத் திட்டங்களுக்கு நாம் ஏராளமான நிதியை செலவிட்டுள்ளோம். அதை வறுமை ஒழிப்புக்காக செலவிட்டிருக்கலாமே?
கலாம்: அக்னி, பிருத்வி உள்ளிட்ட ஏவுகணைத் திட்டங்களில் மிகவும் குறைந்த தொகையைத்தான் இந்தியா செலவிட்டது. அதனால் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்குச் செலவிடப்பட வேண்டிய நிதியை ஆயுதம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்ற கருத்து தவறானது என்றார்
மேலும் அவர் கூறுகையில், அடுத்த 10 ஆண்டுகளில் தெற்கு ஆசியப் பகுதியில் உள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணையும் என நம்புகிறேன். ஐரோப்பிய யூனியனைப் போன்று இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்த விரோதங்களை மறந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து செயல்பட முடியும்போது, நம்மால் முடியாதா? என்றார்.
பின்னர் ஊரக மேம்பாட்டுக் கருத்தரங்கில் பேசிய கலாம், இந்தியாவும், வங்கதேசமும் சணல் உற்பத்தியில் உலக அளவில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. செயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக, இயற்கையாக விளையும் சணலைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.
வங்கதேசத்தின் குல்னா பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த ஏராளமான வசதிகள் உள்ளன என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications