நடிகை ஊர்வசி போதைக்கு அடிமையாகிவிட்டார்: எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கணவர் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

Urvashi
எர்ணாகுளம்: பிரபல நடிகை ஊர்வசி போதைக்கு அடிமையாகிவிட்டதாக அவரது முன்னாள் கணவரான நடிகர் மனோஜ் கே. ஜெயன் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் மனோஜ் கே. ஜெயனுக்கும் நடிகை ஊர்வசிக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் குஞ்ஞாச்சா என்ற மகள் இருக்கிறார். அண்மையில் ஊர்வசியும் மனோஜ் கே. ஜெயனும் விவாகரத்து பெற்றுவிட்டனர். ஜெயனிடம் மகள் ஒப்படைக்கப்பட்டார்.

ஆனால் தம்மிடம் மகளை ஒப்படைக்கக் கோரி ஊர்வசி மீண்டும் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட நாட்களில் மகளை ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவிட்டது.

இதற்கு மனோஜ் கே. ஜெயன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதில் ஜூலை 6-ந் தேதி முதல் ஒருவார காலத்துக்கு மகளை ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வைத்துதான் ஊர்வசியிடம் குழந்தையை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதற்காக எர்ணாகுளம் நீதிமன்றத்துக்கு ஊர்வசி, மனோஜ் கே ஜெயன், அவர்களது மகள் ஆகியோர் நேற்று வந்திருந்தனர். ஆனால் ஊர்வசியுடன் மகள் செல்ல மறுத்துவிட்டார். மேலும் ஊர்வசி எப்போதும் போதையில் இருப்பதால் அவரை நம்பி மகளை ஒப்படைக்க முடியாது. இப்போதும் அவர் குடிபோதையில்தான் இருக்கிறார் என்று மனோஜ் கே ஜெயன், நீதிபதியிடம் புகார் தெரிவித்தார்.

இதற்கு ஊர்வசி தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஊர்வசிக்கு உடல்நலக் குறைவுதான் ஏற்பட்டுள்ளதே தவிர அவர் போதை அடிமை அல்ல. இதற்கான மருத்துவ பரிசோதனைக்கு தயாராக இருக்கிறார். தேவைப்பட்டால் மருத்துவரின் அறிக்கையைத் தாக்கல் செய்கிறோம் என்று வாதிடப்பட்டது.

ஊர்வசியுடன் மகள் செல்ல மறுத்துவிட்டதால் மனோஜ் கே ஜெயனே அழைத்துச் சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+