குடியரசு துணைத் தலைவர் தேர்தல்- முதல் நாளில் வேட்புமனுத்தாக்கல் யாரும் செய்யவில்லை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.
குடியரசு துணைத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் அடுத்த மாதம் 10-ந் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 7- ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலுக்கான அதிகாரியாக மக்களவை செயலாளர் டி.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டதால் வேட்புமனுத்தாக்கலும் தொடங்கியது. ஆனால் முதல் நாளில் யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய 20-ந் தேதி கடைசிநாள்.
இத்தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர் மற்றும் நியமன எம்.பி.க்கள் ஆகியோர் வாக்களிப்பர்.












Click it and Unblock the Notifications