மேற்கு வங்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்த மாணவியை அதை குடிக்க வைத்த ஹாஸ்டல் வார்டன்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஹாஸ்டல் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் 5ம் வகுப்பு மாணவியை அவரது சிறுநீரைக் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சாந்தி நிகேத்தனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழக்கத்துடன் சேர்ந்த பதா பவன் பள்ளி ஹாஸ்டலில் தங்கி 5ம் வகுப்பு படிப்பவர் புனிதா. கடந்த சனிக்கிழமை மாலை ஹாஸ்டல் வார்டன் உமா போட்டார் ரவுண்ட்ஸ் வந்துள்ளார். அப்போது புனிதாவின் படுக்கை ஈரமாக இருந்தது. அவர் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இதையறிந்த வார்டன் புனிதாவின் பெட்ஷீட்டில் உள்ள சிறுநீரை மாணவியின் வாயில் பிழிந்து அதை குடிக்க வைத்துள்ளார். புனிதா படுக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம் ஏற்கனவேவும் நடந்துள்ளது.
இது குறித்து மாணவி தனதகு பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் அவரது பெற்றோரும், பொதுமக்களும் ஹாஸ்டலுக்கு திரண்டு வந்து வார்டன் உமாவை தாக்கினர். மேலும் உமா போட்டாருக்கு எதிராக போல்பூர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் உமா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை பல்கலைக்கழக துணை வேந்தரிடம் அளி்ககும் என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் மாணவியை சிறுநீரைக் குடிக்க வைத்ததற்காக ஹாஸ்டல் வார்டன் உமாவும், அத்துமீறி ஹாஸ்டலுக்குள் நுழைந்ததற்காக மாணிவியின் பெற்றோரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications