நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி கிங்பிஷர் நிறுவன விமானிகள் வேலை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil

கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிங்பிஷர் நிறுவன விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 5 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தில்லியிலிருந்து தரம்சாலா மற்றும் டேராடூனுக்கு செல்லும் தலா 2 விமானங்களும், சிம்லாவுக்கு செல்லும் ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டதாக கிங்பிஷர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் ஏர்பஸ் ஏ-320 வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 நாட்களில் ஊதியம் வழங்கக் கோரி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன விமானிகள் 2-வது முறையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications