அபு ஜிண்டால் என் மகன் தான்: தாய்
டெல்லி: மும்பை தாக்குதல்களுக்கு மூளையாக இருந்த அபு ஜிண்டால் தன்னுடைய மகன் செய்யது ஜபியுத்தீன் தான் என்று அவனது தாய் ரெஹானா பேகம் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் ஜிண்டால் தனது மகனே இல்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை தாக்குதல்களுக்கு மூளையாக இருந்த அபு ஜிண்டால் டெல்லி விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவன் தனது மகன் செய்யது ஜபியுத்தீன் என்று அவனது தாய் ரெஹானா பேகம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவுரங்காபாத் ஆயுத வழக்கு, அகமதாபாத் ரயில் வெடிகுண்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு மாயமான மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த செய்யது ஜபியுத்தீன் தான் அபு ஜிண்டால் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
டெல்லியில் நீதிமன்றத்தில் அபு ஜிண்டாலை பார்த்த ஹெரானா போகம் அவனிடம் நீ என் ஜபி தானே என்று கேட்டார். மேலும் குடும்ப நபர்களின் பெயர்கள் மற்றும் குடும்ப விஷயங்கள் பற்றி ஜிண்டாலிடம் கேள்வி கேட்டார். அத்தனை கேள்விகளுக்கும் ஜிண்டால் சரியான பதில் அளித்ததையடுத்து அவன் தன்னுடைய மகன் ஜபியுத்தீன் தான் என்பதை அவர் உறுதி செய்தார். இந்த தகவலை ஜிண்டாலுக்காக ரெஹானா பேகம் ஏற்பாடு செய்துள்ள வழக்கறிஞர் எம்.எஸ். கான் தெரிவி்த்தார்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி ஜிண்டால் சவூதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டபோது பீடில் உள்ள ரெஹானாவின் வீட்டு முன்பு செய்தியாளர்கள் குவிந்துவிட்டனர். அவர்கள் ரெஹானாவிடம் மும்பை தாக்குதலில் ஜிண்டாலின் பங்கு பற்றி கேட்டனர்.
அப்போது அவர் கூறுகையில், கராச்சியில் இருந்து கொண்டு அஜமல் கசாப் மற்றும் பிற தீவிரவாதிகளை இயக்கியதாகக் கூறப்படும் ஜிண்டால் எங்களுக்கு எந்த பணமும் கொடுக்கவில்லை. என் மகன் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டான் என்பதை நான் நம்ப மாட்டேன். அதனால் அவன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். என் கணவர் ஜகியுத்தீன் அன்சாரி மற்றும் என்னிடம் இருந்து போலீசார் டிஎன்ஏ மாதிரிகளைப் பெறவில்லை. அவன் 2006ம் ஆண்டு மாயமான பிறகு அவனை எங்கு தேடுவது என்றே தெரியவில்லை.
இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து அவனுடைய போட்டோவைப் பார்த்தவுடன் அடையாளம் தெரியவில்லை. ஏனென்றால் போட்டோவில் அவன் வித்தியாசமாக இருந்தான் என்றார்.
ஜிண்டால் தனது மகனே இல்லை என்று ரெஹானா முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications