ஓட்டப்பிடாரத்தில் தான் வளர்ச்சிப் பணிகள் அதிகம்: டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கலெக்டர் பதில்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தான் அதிக அளவில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சந்தேகம் இருந்தால் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நேரில் வரலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு,
இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தப்பாத்தி, மாப்பிள்ளையூரணி முகாம்களிலுள்ள 132 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் மீதமுள்ள 28 பெண்களுக்கு விரைவில் தையல் இயந்திரம் வழங்கப்படும்.
ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகைக்காக 8,394 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 6,419 மனுக்கள் உரிய தகுதி இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தகுதியுள்ள 1,975 பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் 701 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதல்வர் அறிவித்த திட்டங்களில் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு தான் அதிக அளவில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தாலும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் தெரிவிக்கலாம். அதில் குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக ஓட்டப்பிடாரத்தில் முதியோர் உதவித்தொகை கொடுக்கப்படவில்லை, வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி அப்பகுதி எம்.எல்.ஏ.வும், புதிய தமிழகம் கட்சித் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கலெக்டர் ஆசிஷ் குமாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications