இலங்கை கடற்படை தாக்குதல்-அமைச்சர் ஜெயபாலை சந்திக்கும் ராமேஸ்வரம் மீன்வர்கள்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலை இன்று சந்தித்து பேசுகின்றனர்.

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் பிழைப்புக்காகக் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். அப்போது அவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி வருவதாகவும், விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்வதாகவும், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதாகக் கூறியும் அவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தியும், அவர்களது வலைகளை அறுத்தும், படகை உடைத்தும் அராஜகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும், இறால் மீன் விலை வீழ்ச்சியைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஜூலை 1 ம் தேதி முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதி மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 நாட்களாக நடைபெறும் இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் உடன்பாடு எட்டவி்ல்லை.

இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காணக் கோரி தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலை இன்று சந்திக்க மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+