ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தானில் அடைக்கலம் கொடுத்தது முஷாரப்தான்: முன்னாள் ஐ.எஸ்.ஐ. தலைவர் தகவல்
சிட்னி: அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தானில் அடைக்கலம் கொடுத்தது முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பும் அவரது ஆட்சிக்காலத்து ராணுவ அதிகாரியான பிரிகேடியர் இஜாஷ் ஷாவும்தான் என்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் தலைவர் ஜியாவுதீன் பட் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜியாவுதீன்பட் அளித்த பேட்டியில், பின்லேடனை அமெரிக்கா தேடிக் கொண்டிருந்தபோது முஷாரப் ஆட்சிக்காலத்தில் இஜாஷ் ஷா உத்தரவின்பேரில் அபோதாபாத்தில் பிரம்மாண்ட வீட்டில் தங்க அடைக்கலம் கொடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
மேலும், "இஜாஷ் ஷாதான் முஷாரப்பின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவர்.. அவர்தான் முஷாரப்புக்கு எல்லாமுமாக இருந்தவர்" என்றும் ஜியாவுதீன் பட் கூறியுள்ளார்.
ஆனால் இதனை இஜாஷ் ஷா நிராகரித்துள்ளார். தாம் பணியில் இருந்து 2008-ம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டதாகவும் பின்லேடன் 2011-ம் ஆண்டுதான் பிடிபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே இஜாஷ் ஷாவுக்கு பெனாசிர் படுகொலையிலும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications