அட, நம்ம தா.பாண்டியன் ஊரில் தான் இருக்கிறார்!
சென்னை: இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் 13ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பல்லாயிரம் தமிழர்களை கொலை செய்த சிங்கள ராணுவத்துக்கு இந்திய அரசால் தமிழகத்தில் பயிற்சி அளிக்கும் முடிவை, ஒட்டு மொத்த தமிழ் மக்களும் எதிர்த்து நின்றதன் காரணமாக, தற்போது பெங்களூரில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்திய அரசின் முடிவு, தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து துரோகம் செய்வதையே காட்டுகிறது. மத்திய அரசின் இம்முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்தும், இந்தியாவின் எந்த மூலையிலும் இலங்கை சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என வலியுறுத்தியும் வரும் 13-7-2012 வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் இதற்கு ஆதரவு தரவேண்டுகிறோம் என்று கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலப் பிரச்சனைகளுக்காக அரசை எதிர்த்து பெரிய அளவில் தா.பா. இதுவரை பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications