தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காவல்துறையின்இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த பல ரகசிய தகவல்களை ஹேக்கர் கும்பல் திருடியுள்ளது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

திருட்டு போய் விட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகக் காவல்துறையின் இணைய தளத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் கையாளப்படும் வழக்குகள் தொடர்பான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். தேடப்படும் குற்றவாளிகளின் விவரமும் புகைப்படத்துடன் இதில் வெளியிடப்பட்டு இருக்கும். மேலும் ஆன்லைன் மூலம் பெறப்படும் புகார்கள், அதில் எடுக்கப்படும் நடவடிக்கை விவரங்களும் இதில் பதிவு செய்யப்படும்.

இந்த இணையதளத்தில் உள்ள சில முக்கியமான ரகசிய தகவல்கள் குறிப்பாக ஆன்லைன் மூலம் வந்த புகார் விவரங்கள் திருடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. ஊடகங்களில் இச்செய்தி வெளியான பிறகே குற்ற ஆவணகாப்பக அதிகாரிகளுக்கும் தெரிய வந்திருக்கிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த காவ்லதுறையினர் சைபர் கிரைம் போலீசாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+