தெற்காசிய விளையாட்டு போட்டி: இலங்கை அணியில் 8 விடுதலைப் புலிகள்

Subscribe to Oneindia Tamil

LTTE
கொழும்பு: டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ள இலங்கை அணியில் 8 விடுதலைப் புலிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் அடுத்த ஆண்டு தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இலங்கை சார்பாக பங்கேற்க உள்ள வீரர்கள் தேர்வு கடந்த மாதம்(ஜூன்) நடைபெற்றது. இதில் 8 விடுதலைப் புலிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஹர்ஷா அபேகோன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பணியாற்றிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு பல்வேறு முகாம்களில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் 133 பேரில் இருந்து திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் துப்பாக்கி சுடுவதில் திறமையானவர்கள்.

கிரிக்கெட்டில் 2 பேரும், ஒரு கராத்தே வீரரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாற்றுத் திறன் படைத்தவர்களுக்கான தூப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+