காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மிகப் பெரும் தாக்குதல் நடத்த லஷ்கர் அமைப்பு சதி: ஜிண்டால் வாக்குமூலம்
டெல்லி: ஜம்மு காஷ்மீரிலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாக மும்பை தாக்குதலின் மூளையான அபு ஜிண்டாலின் வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.
லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த அபு ஜிண்டால், செளதியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான். லஷ்கர் அமைப்பை பற்றி ஏராளமான உண்மை தகவல்களை ஜிண்டால் வாக்குமூலமாகக் கொடுத்திருக்கிறான்.
காஷ்மீரிலும் மற்ற மாநிலங்களிலும் மிகப் பெரும் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா திட்டமிட்டிருந்தது என்ற புதிய தகவலைக் கூறியிருக்கிறான் ஜிண்டால்.
இது பற்றி அவன் அளித்த வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ளதாவது:
காஷ்மீரைச் சேர்ந்த லஷ்கர் கமாண்டர் ஒருவர்தான் ஜிண்டாலை அந்த அமைப்பிற்குள் கொண்டு வந்தான். அவரது பெயர் அஸ்லம் காஷ்மீரி. இன்னொரு லஷ்கர் தீவிரவாதியான ஃபயாஸ் காக்சி மூலமாக ஜிண்டாலை மகாராஷ்டிரத்தில் கடந்த 2005-ல் சந்தித்தான். இந்திய முஸ்லிம் இளைஞர்களைத் தேர்வு செய்து தீவிரவாதப் பயிற்சி அளிக்கும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதை மிகச் சுலபமாக ஜிண்டாலைத் தன் வழிக்குக் கொண்டு வந்தான். மும்பை மீதான தாக்குதலுக்கு முன்பும், பின்பும் ஜிண்டால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தங்கியுள்ளான்.
அந்த நகரில் ஐக்கிய ஜிகாத் கவுன்சில் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. தீவிரவாத அமைப்புகளின் கூட்டமைப்பான இது, புதிய தீவிரவாதக் குழுக்களை ஜம்மு காஷ்மீருக்குள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய மரபு சாராத வழிகள் மூலமாக அனுப்பி வைக்கத் திட்டமிட்டிருக்கிறது. அங்கிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் தீவிரவாதிகள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் பல்வேறு நகரங்களில் வழிபாட்டுத் தலங்களையும், மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவது என்பது திட்டமாகும் என்று அந்த வாக்குமூலத்தில் ஜிண்டால் கூறியிருக்கிறான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications