திருப்பூரில் இடி மின்னலுடன் கனமழை: சாலைகளில் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் திடீரென்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. கடந்த சிலவாரங்களாக நிலவிய வெப்பம் தணிந்து குளுமை பரவியதால் திருப்பூர் நகர மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தென்மேற்குப் பருவமழை ஏமாற்றி வந்த நிலையில் திருப்பூரில் இன்று பிற்பகல் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஈரப்பதமான காற்று வீசிய சூழ்நிலையில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யத் தொடங்கியது.
எதிர்பாராத மழையால் திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் சாலையோரங்களில் ரெடிமேட் ஜவுளிக்கடைகள் அமைத்திருந்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். நீண்டநாட்களாக போக்கு காட்டி வந்த மழை இன்று கனமழையாக மாறி பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
கடந்த இரண்டு நாட்களாக நிலவிய கடுமையான வெப்பம் இந்த திடீர் மழையினால் தணிந்து குளுமை பரவியதால் நகரமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.












Click it and Unblock the Notifications