ஜுனியர் விகடன் மீது முதல்வர் ஜெயலலிதா 4வது முறையாக அவதூறு வழக்கு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான செய்தி வெளியிட்டதாகக் கூறி ஜூனியர் விகடன் இதழ் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் இருந்து வாரம் இருமுறை வெளியாகும் ஜூனியர் விகடன் பத்திரிக்கை 15.7.2012 தேதியிட்ட இதழில் கொடநாடு வந்த குஷி ராவணன் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில், எஸ்டேட்டின் சில பகுதிகள் ராவணனின் கட்டுப்பாட்டில் இருந்தாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராவணனை கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு வரவழைத்து, அவரது பிடியில் இருந்த இடங்களை முறையப்படி பெயர் மாற்றம் செய்தாதகவும் அதனால், அவர் பவ்யமாக வந்து முடித்துக் கொடுத்துவிட்டு நகர்ந்துள்ளார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், பங்களா அறை ஒன்றில் புதிய பெயரில் பத்திரத் தயாரிப்பு வேலைகள் நடந்தபோது ஜெயலலிதா அங்கு வரவில்லையாம். சசிகலா மட்டும் இன்டர்காமில் ராவணனிடம் இன்னும் சில விஷயங்கள் தொடர்பாகக் கட்டளை போட்டார் என்றும் சொல்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தி முற்றிலும் தவறாகும். உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ராவணன் மீது 4 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் தங்கியுள்ள கொடநாடு பங்களாவுக்கு ராவணன் செல்லவே இல்லை. முதல்வருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, அவதூறு செய்தி வெளியிட்ட ஜூனியர் விகடன் இதழ் ஆசிரியர் ரா.கண்ணன், வெளியீட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ்.மாதவன் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ஜூனியர் விகடன் இதழ் மீது முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே மூன்று அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications