இந்திய குடியரசுக் கட்சி எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதி
வேலூர்: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இந்திய குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் செ.கு. தமிழரசன் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய குடியரசுக் கட்சி சார்பில் அதிமுக கூட்டணி சார்பில் கே.வி.குப்பத்தில் நின்று வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பிரானவர் செ.கு.தமிழரசன். வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அமைச்சர்கள் முனுசாமி, விஜய், முகமது ஜான் ஆகியோர் கலந்து கொண்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் செ.கு. தமிழரசனும் கலந்து கொண்டார்.
ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் கே.வி.குப்பத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுவிட்டு வேலூர் திரும்பினார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை உடனே வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications