டெல்லியில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் நாளைமுதல் தொடர் உண்ணாவிரதம்
டெல்லி: ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் நாளை முதல் டெல்லியில் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
டெல்லி ஜந்தர்மந்தரில் தொடங்க உள்ள இந்த போராட்டத்துக்கு அன்னா ஹசாரே குழுவின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை தாங்குகிறார். இப்போராட்டத்தில் உடல்நலக் குறைவால் அன்னா ஹசாரே கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் மேடையில் அமர்ந்திருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த அன்னா குழுவினர் அனுமதி பெற்றுள்ளனர். இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு யோகா குரு பாபாராம்தேவுக்கும் அன்னா குழு அழைப்பு விடுத்திருக்கிறது. அவரும் அவரது ஆதரவாளர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடும்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அன்னா ஹசாரே குழுவினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லியில் குவிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications