இந்தியாவில் தடை- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

டெல்லியில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்ற பதிவாளர் அனில்குமார் கவுசல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 4-ம் பிரிவின் கீழ், உங்களுடைய இயக்கத்தை சட்டவிரோதமான இயக்கம் என்று ஏன் அறிவிக்கக்கூடாது என்பதற்கும், இத்தகைய அறிவிப்பை உறுதி செய்யும் உத்தரவை ஏன் பிறப்பிக்கக்கூடாது என்பதற்குமான விளக்கத்தை இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இதற்கு மறுப்போ அல்லது பதிலோ இருந்தால் 30 நாட்களுக்குள் டெல்லியில் உள்ள நடுவர் மன்றப் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம். மறுப்புரை, பதில், ஆவணங்கள் ஆகியவை வட்டார மொழியில் இருந்தால் அதன் உண்மையான ஆங்கில மொழி பெயர்ப்பும் அத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதுதொடர்பான கூடுதல் நடவடிக்கைகளுக்காக டெல்லி உயர்நீதிமன்ற ஏ' கட்டிட தொகுதியில் உள்ள நீதிமன்றம் எண்: 20-ல் அடுத்த மாதம் 27-ந் தேதி பிற்பகல் உரிய வழக்கறிஞர் மூலம் நடுவர் மன்றத்தில் ஆஜராகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications