கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு இனிமேல் எதிர்காலம் இல்லை: தனியரசு
கரூர்: கொங்குநாடு முன்னேற்ற கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும், பொதுச் செயலாளர் ஈஸ்வரனுக்கும் இடையே பெரிதாகி வருகிறது. கொமுக அறக்கட்டளையில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை ஈஸ்வரன் மோசடி செய்துள்ளதாக பெஸ்ட் ராமசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், கொ.மு.கவின் நிறுவன தலைவர் நான் தான். கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் நிறுவன துணைத் தலைவரும் நான் தான். மேலும் இந்த இயக்கத்துக்கு ஈஸ்வரனை கொண்டு வந்ததும் நான் தான். அவரை நம்பி கட்சியில் செயல்பட விட்டேன். ஆனால் அவர் கட்சியை கைப்பற்ற முடிவு செய்ததோடு, என்னை கட்சியை விட்டு நீக்கவும், என்னை எதுவும் செய்யவும் துணிந்து விட்டார்.
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையும், கொங்குநாடு முன்னேற்ற கழகமும் தொடர்ந்து செயல்படும். என்னை தலைவராக ஏற்றுக் கொள்பவர்கள் இதில் இருக்கலாம். எனது தலைமை பிடிக்காவிட்டால் சென்று விடலாம். ஈஸ்வரனும் இருந்தால் இருக்கட்டும். என்னை பிடிக்காவிட்டால் வெளியேறி விடலாம் என்றும் பெஸ்ட் ராமசாமி கூறியிருந்தார்.
இந் நிலையில் கொங்குநாடு முன்னேற்ற கழக எம்எல்ஏவும், கொங்கு நாடு இளைஞர் பேரவை நிறுவனருமான தனியரசு கரூரில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 14 மாதங்களில் தமிழகத்தில் ஜாதி கலவரம் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. காவிரிப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் மத்திய அரசுடன் சமரசம் செய்து கொள்ளாமல் தமிழகத்தின் உரிமைகளை விட்டு கொடுக்காமல் முதல்வர் போராடி வருகிறார்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கொங்கு இளைஞர் பேரவை வேகமாக வளர்ந்து வருகிறது. வணிக நோக்குடன் தொடங்கப்பட்ட கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு தமிழகத்தில் இனி எதிர்காலம் இல்லை. அந்த அளவுக்கு மக்கள் அதை புறக்கணித்து விட்டனர்.
கொங்கு நாடு முன்னேற்ற கழகம் இனிமேல் அரசியல் நடத்த முடியாது. பல மாவட்டங்களில் உள்ள கொ.மு.க. தொண்டர்கள் கொங்கு இளைஞர் பேரவையில் சேர்ந்து வருகின்றனர் என்றார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications