ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு
பெங்களூர்: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி. சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி மல்லிகார்ஜுனையா நியமனம் செய்யப்பட்டதை முறைப்படி அரசு ஆணையாக வெளியிடவில்லை என்று கூறி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, சிறப்பு நீதிபதி நியமனத்தில் சட்ட விதிகள் மீறப்படவில்லை என்று தீர்ப்பளித்தார். மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு (நேற்றைக்கு) ஒத்திவைத்தார். அன்றைய தினம் (நேற்று) 313-வது விதியின் கீழ் சசிகலா உள்ளிட்டோர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர்கள் குமார், கந்தசாமி, மணிசங்கர், அசோகன் ஆகியோர் ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அதில் சிறப்பு நீதிபதி நியமனத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன. இது குறித்து சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார். எனவே, பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 23) மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை இன்னும் ஒரு வார காலத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு அரசு உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுடா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்கின்றனர். இதற்கு முன்பு அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மேல் கோர்ட்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றன. எனவே, அதை கருத்தில் கொள்ளாமல் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கும் பணிகளை தாமதமின்றி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, வழக்கு விசாரணையை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications