குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த இடத்தில் வேன் கவிழந்து 8 வயது சிறுமி பலி
குற்றாலம்: குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த இடத்தில் ஏற்பட்ட விபத்தில் 8 வயது சிறுமி பரிதாபமாக பலியானாள்.
குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. இதனால் நாடு முழுவதும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அதனால் குற்றாலத்தில் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமாக உள்ளது.
இந்நிலையில் ராஜபாளையம் தளவாய்புரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வேன் ஒன்றில் இன்று காலை குற்றாலத்திற்கு வந்தனர். அவர்கள் குற்றலாத்தில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அங்கிருந்து ஐந்தருவிக்கு சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மாருதி கார் ஒன்று அவர்களின் வேன் மீது மோதியது. இதனால் வேன் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த சுப்புலட்சுமி என்ற எட்டு வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தாள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications