3 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் ஐஎஸ்ஐ தலைவர் ஜாஹிருல் இஸ்லாம்: சிஐஏ தலைவருடன் சந்திப்பு
வாஷிங்டன்: பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜாஹிருல் இஸ்லாம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏவின் தலைவர் டேவிட் பெட்ரேயஸை சந்தித்து பேசுகிறார்.
பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜாஹிருல் இஸ்லாம் இந்த பதவிக்கு வந்த பிறகு முதன் முதலாக வரும் ஆகஸ்ட் 1 முதல் 3ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏவின் தலைவர் டேவிட் பெட்ரேயஸை சந்தித்து பேசுகிறார்.
அப்போது அவர் பாகிஸ்தானின் பழங்குடியின கிராமங்களில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்தும் தாக்குதல்கள் குறித்து விவாதிப்பகுடன் அந்த தாக்குதல்களை உடனே நிறுத்துமாறும் வலியுறுத்தவிருக்கிறார். இது தவிர அவர் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், உளவுத் துறை அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத் துறை குழுக்களை சந்தித்து பேசுகிறார்.
இஸ்லாம் கடந்த மே மாதமே அமெரிக்கா செல்வதாக இருந்தது. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்லும் வழியை பாகிஸ்தான் மூடியது. இந்த வழியைத் திறப்பது தொடர்பாக பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படாததால் அவர் தனது பயணத்தை தள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications