பஞ்சாப்பில் பள்ளி பஸ் மீது உள்ளூர் ரயில் மோதி 4 மாணவிகள் பலி-19 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

அமிர்தசரஸ்:அமிர்தசரஸ் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற பஸ் மீது, உள்ளூர் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பள்ளி மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினார். மேலும் 19 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸை அடுத்த கோட் மெஹ்தாப் சிங் கிராமத்தில் பியாஸ் என்ற ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் அருகே ஆளில்லாத ரயில்வே கிராசிங் ஒன்று உள்ளது.

இன்று காலையில் பாபா பாக்லா நகரை சேர்ந்த சந்த் பாபா மஜாசிங் கரம்ஜோத் மார்டன் பள்ளியில் படிக்கும் 23 குழந்தைகளை ஏற்றி கொண்டு பள்ளி பஸ் பியாஸ் ரயில் நிலையத்தை அடுத்துள்ள ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை கடந்தது.

அப்போது ஒரே ஒரு பெட்டியுடன் அந்த வழியாக வந்த உள்ளூர் ரயில், பள்ளி பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் பயணித்த 4 பள்ளி குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த குழந்தைகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இறந்த 4 பேரும் மாணவிகள் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், விபத்தில் சிக்கிய பஸ்சில் 12 முதல் 14 வயது கொண்ட பள்ளி மாணவ, மாணவியர் பயணித்தனர். உள்ளூர் ரயில் வழக்கத்திற்கு மாறாக வேகமாக வந்ததால் விபத்து நேர்ந்துள்ளது என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+