இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா 'அப்துல் கலாம்' ஆசாத்: இது பிரதமர் மடலின் கூத்து!
புதுச்சேரி: தமிழக மற்றும் புதுவை மாநில அரசுகளுக்கு பிரதமர் அனுப்பிய கடிதத்தில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் என்பதற்கு பதிலாக மௌலானா அப்துல் கலாம் ஆசாத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் குழம்பியுள்ளனர்.
விடுதலைப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமானவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத். அவரின் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதியை தேசிய கல்வி நாளாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இந்நாளை கல்வி உரிமை நாளாகக் கொண்டாடுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மன்மோகன் சிங் தனது கையெழுத்துடன் கூடிய கடிதத்தை அனுப்பினார்.
அந்த கடிதம் அந்தந்த மாநிலத்தின் மொழியில் இருந்தது. தமிழகம் மற்றும் புதுவைக்கு தமிழில் எழுதி அனுப்பப்பட்டிருந்த கடிததத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புதுவை அரசு அந்த கடிதத்தின் நகல்களை அரசுத் துறைகள் மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தது.
அந்த கடிதத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் என்பதற்கு பதிலாக மௌலானா அப்துல் கலாம் ஆசாத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த மாணவர்கள் எங்களின் பாடப்புத்தகங்களில் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் என்று உள்ளதே. இந்த கடிதத்தில் பிரதமர் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் என்று குறிப்பிட்டுள்ளாரே. அப்படி என்றால் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் தான் யார் என்று ஆசிரியர்களை கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications