Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடிதபசு திருவிழா: சங்கரன்கோவிலில் குவியும் பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் ஆடிதபசு திருவிழாவையொட்டி அங்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடிதபசு திருவிழா கடந்த 22ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் தவக்கோலத்தில் எழுத்தருளி வீதியுலா வருகிறார். இரவில் மண்டகப்படிதாரர் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் அம்பாள் வீதியுலா, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

திருவிழாவின் 9வது நாளான நேற்று அம்பாள் தேரோட்டம் நடந்தது. இதில் திராளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். காலையில் அம்பாள் முளைப்பாரி எடுத்தல் அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தபசு காட்சி 11ம் திருநாளான நாளை (1ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி காலையில் கோவில் பிரகாரத்தில் அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

மாலை 5 மணிக்கு சுவாமி சங்கரநாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி தபசு பந்தலை அடைந்ததும் மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் தபசு காட்சி நடைபெறுகிறது. தொடர்நது இரவு 11 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சங்கரலிங்கராக வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி இரவு 12 மணிக்கு தெற்கு ரதவீதியில் அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் இரண்டாம் தபசு காட்சி நடைபெறுகிறது.

தபசு காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நெல்லை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவி்ன்பேரில் டிஎஸ்பி கலிபுல்லா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+