Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்க்க வராத நண்பரை போட்டு உதைத்த 2 அரவாணிகள்...!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: தங்களை முன்பு போல அடிக்கடி பார்க்க வராத நண்பர் மீது கோபம் கொண்ட இரண்டு அரவாணிகள், அவரை சரமாரியாக அடித்து உதைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து அடிபட்ட நபர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் கட்லோடியா காவல் நிலையத்தில் 33 வயதான ஹிமன்ஷு படேல் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில், பிரஞ்சால் தே மற்றும் ஜோதி தே என்ற இரு அரவாணிகளும், அவர்களது நண்பர் ஒருவரும் சேர்ந்து தன்னை அடித்து உதைத்து விட்டதாகவும், பணத்தைப் பறித்துச் சென்று விட்டதாகவும் படேல் கூறியிருந்தார்.

ஏன் இந்த அடிதடி....?

மணிநகர், ஆனந்த் சொசைட்டி பகுதியைச் சேர்ந்தவர் படேல். இவருக்கும், இந்த இரு அரவாணிகளுக்கும் இடையே நீண்ட காலமாக நெருங்கிய நட்பு இருந்து வந்ததாம். பட்டதாரியான படேல், காந்தி சாலையில் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த இரு அரவாணிகளையும் தினசரி போய் பார்த்து விட்டு சந்தோஷமாக பேசி விட்டு வருவாராம். அதேபோல இந்த அரவாணிகளுக்கும், படேலைப் பார்க்காமல் இருக்க முடியாதாம்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இரு அரவாணிகளையும் படேல் போய்ப் பார்க்கவில்லையாம். இதனால் அரவாணிகள் இருவரும் வருத்தமடைந்தனர். ஏன் நம்மை படேல் பார்க்கவில்லை என்று குழப்பமடைந்தனர் அவர்கள்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், கட்லோடியாவில் நடந்த ஒரு கோவில் விழாவுக்குப் போயிருந்தார் படேல். அங்கு அந்த இரு அரவாணிகளும், அவர்களது இன்னொரு நண்பருடன் வந்திருந்தனர். படேலைப் பார்த்ததும் பாய்ந்து வந்தனர் அரவாணிகள். ஏன் எங்களைப் பார்க்க வருவதே இல்லை என்று கோபத்துடன் கேட்டனர். அதற்கு எதையோ காரணமாக சொன்னார் படேல்.

இதையடுத்து அருகில் உள்ள ஒரு கோவிலில் நடக்கும் விழாவுக்கு எங்களுடன் வாயேன் என்று அரவாணிகள் அழைத்துள்ளனர். ஆனால் படேல் வர முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் அவரைக் கட்டாயப்படுத்தி தாங்கள் வந்த காரில் கூட்டிப் போயுள்ளனர். வழியிலேயே படேலை மூன்று பேரும் சரமாரியாக அடித்து உதைத்தார்களாம். பின்னர் அவர் வைத்திருந்த ரூ. 5000 பணத்தையும் பறித்துக் கொண்டு கீழே தள்ளி விட்டு விட்டனராம்.

எங்களை ஏன் பிடிக்கவில்லை, ஏன் பார்க்க வருவதில்லை என்று கேட்டு கேட்டு அரவாணிகள் தன்னை அடித்ததாக போலீஸாரிடம் படேல் கூறியுள்ளார்.

புகாரை வாங்கியுள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+