அகமதாபாத்: வட மாநில மின் தடைக்கு பிரதமர் மன்மோகன் சிங் மெளனம் சாதித்து வருவது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். பாதி இந்தியாவே இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இப்போதும் கூட கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கிறாரா பிரதமர் என்று கேட்டுள்ளார் மோடி.
வடக்கு, கிழக்கு மாநில மின்தடையால் 19 மாநிலங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. கிட்டத்தட்ட 60 கோடி மக்கள் கரண்ட் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மின்தடை குறித்து மோடி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஏற்கனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மோசமான நிதி நிர்வாகத்தால் சாமானிய மக்களின் சட்டை பாக்கெட்டில் ஒரு பைசா கூட இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. வயிறுகள் பட்டினியில் வாடி வருகின்றன. பணவீக்கம் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. இன்று அத்தனை பேரையும் இருட்டில் தள்ளி விட்டுள்ளனர்.
பிரதமர் அவர்களே, 60 கோடி மக்கள், 19 மாநிலங்கள் இருளில் மூழ்கியுள்ளனர். இப்போதும் கூட நீங்கள் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா என்பதை அறிய நாட்டு மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர் என்று கேட்டுள்ளார் அவர்.
The second blackout in two days gave ammunition to Gujarat Chief Minister Narendra Modi, who didn't waste the opportunity to target the Congress-led UPA government at the Centre. "With poor economic management the UPA has emptied pockets of common man, kept stomachs hungry with inflation & today pushed them into darkness!," Mr Modi wrote on Twitter. He also tweeted, "Pradhan Mantri ji, 60 crore people & 19 states are in darkness. Country wants to know is there any coalition dharma you are following here too?"