2ஜி வழக்கு: இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆ.ராசாவிடமே இருந்தது

2ஜி ஊழல் வழக்கு டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றபோது ஓய்வு பெற்ற தொலைத்தொடர்புத் துறை துணை டைரக்டர் ஜெனரல் ஸ்ரீவஸ்தவா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளித்தார். அப்போது அவரிடம் வழக்கறிஞர் காட்டிய சில ஆவணங்களில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் எழுத்தையும், கையெழுத்தையும் அடையாளம் காட்டினார்.
அவர் தனது சாட்சியத்தில் கூறியிருப்பதாவது,
நான் சில காலம் வேறு துறையில் பணியாற்றி விட்டு 2007ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி மீண்டும் தொலைத்தொடர்பு துறைக்கு வந்தேன். அப்போது சாதாரண மற்றும் செல்போன் சேவை நிறுவனங்கள் யுனிபைட் ஆக்சஸ் சர்வீஸ்' முறைக்கு மாறியுள்ளதைக் கண்டேன். அந்த சேவையை கேட்டுத்தான் நிறைய விண்ணப்பங்கள் வந்திருந்தன. 13-4-2007 அன்று அவற்றுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரையைக் கேட்டு அது நிலுவையில் இருந்தது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து தொலைத்தொடர்பு ஆணையம் தனது முடிவை தெரிவிக்கும். அதை சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்படும். அமைச்சரின் ஒப்புதல் கிடைத்த உடன் அது அரசு கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அமல்படுத்தப்படும். அந்த வகையில் கொள்கை மாற்றம் குறித்த அனைத்து இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் ஆ.ராசாவுக்கு தான் இருந்தது என்றார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications