For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்.எல்.சி. நிறுவனத்தில் ஒரே நாளில் பணி ஓய்வுபெற்ற சூரியன் - சந்திரன்

By Mathi
Google Oneindia Tamil News

நெய்வேலி: என்எல்சி நிறுவனத்தின் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வந்த தீயணைப்புத்துறை ஊழியர்களான சூரியன், சந்திரன் இருவரும் 32 ஆண்டுகள் ஒன்றாகவே பணிபுரிந்து ஜூலை 31-ந் தேதி ஓய்வு பெற்றுள்ளனர்.

கடலூர் மாவட்டம் முட்லூரைச் சேர்ந்த தெய்வநாயகத்தின் மகன் சூரியன். 12.07.1952-ம் ஆண்டு பிறந்து 01.01.1981 ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தில் தீயணைப்புத் துறையில் பஃயர்மேனாக பணியில் சேர்ந்து தற்போது அஸிஸ்டெண்ட் ஆபீசராக ஓய்வுபெற்றுள்ளார்.

அதேபோல் வந்தவாசி தாலுக்கா தெரக்கோடி கிராமத்தைச் சேர்ந்த பூபாலநயினார் மகன் சந்திரன் 11.07.1952-ம் ஆண்டு பிறந்து 01.01.1981 ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தில் தீயணைப்புத் துறையில் பஃயர் மேனாக பணியில் சேர்ந்து தற்போது அஸிஸ்டெண்ட் ஆபீசராக ஓய்வுபெற்றுள்ளார்.

இருவரும் நெய்வேலியில் இருவேறு இடங்களில் வசித்து வந்தாலும் இருவரது வீட்டு எண்ணும் சி-12தான்! இருவரது பிறந்த தேதியில் ஒருநாள் முன், பின் இருக்கிறது. ஆனால் எதிரெதிரான இந்த சூரியனும் சந்திரனுக்கும் பல விஷயங்களில் ஒரே நாளில் அமைந்திருக்கின்றன.

என்.எல்.சி. வளாகத்தில் ஜூலை 31- ந் தேதி நடைபெற்ற விழாவில் இருவருக்கும் சிறப்பாக வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

English summary
NLC frie department employess the name of Sooriyan (Sun) and Chandran (Moon) worked together for 32 years and had retired on July 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X