என் காதலிக்கு இன்னொரு காதலனா.. முதல் காதலன் தூக்கில் தொங்கி சாவு!
சென்னை: தனது காதலிக்கு மேலும் ஒரு காதலன் இருப்பதை அறிந்த முதல் காதலன் மனம் உடைந்து தூக்கில் தொங்கி உயிரை விட்டார். சென்னையில்தான் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
நல்ல காதலோ அல்லது கள்ளக்காதலோ கொலையும், தற்கொலையும் சகஜமாகி வருகிறது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் சதீஷ். வயது25. எம்.பி.ஏ படித்தவர். தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் காதலில் விழுந்தார் சதீஷ். இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர், இன்று நேற்றல்ல, கடந்த 5 வருடமாக.
விழுந்து விழுந்து, உருகி உருகி இருவரும் காதலித்து வந்துள்ளனர். தினசரி பல மணிநேரம் செல்போனிலேயே காதலை வளர்த்து வந்தனர். ஆனால் சமீப காலமாக அந்தப் பெண் திடீரென சதீஷுடன் பேசுவதை குறைக்க ஆரம்பித்து விட்டார். ஒரு கட்டத்தில் பேச்சையே நிறுத்தி விட்டார். இதனால் குழப்பமடைந்தார் சதீஷ்.
என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பினார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது காதலி, இன்னொருவருடன் பைக்கில் படு நெருக்கமாக உட்கார்ந்து பயணம் செய்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து தனது காதலிக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை. இதனால் தனது காதலி இன்னொரு காதலனைப் பிடித்து விட்டதாக அதிர்ச்சி அடைந்த அவர் கவலையுடனும், வேதனையுடனும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென மாலையில் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications