அன்சாரிக்கு 490 ஓட்டு - ஜஸ்வந்த் சிங்குக்கு 238 வாக்குகளே!

தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்ய இன்று தேர்தல் நடந்தது. இதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மூத்த பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிட்டனர்.
துணை ஜனாதிபதி தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 63ல் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இரு அவை உறுப்பினர்களும் வாக்களித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே, சரத் பவார் உள்ளிட்ட பலர் வாக்களித்தனர்.
தேர்தலையொட்டி பல மாநில எம்.பி.க்கள் டெல்லிக்கு வந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தம் பதிவான 736 வாக்குகளில் ஹமீத் அன்சாரிக்கு 490 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜஸ்வந்த்சிங்குக்கு 238 வாக்குகளே கிடைத்தன.
2வது முறையாக பதவிக்கு வரும் 2வது துணை குடியரசுத் தலைவர்
இந்திய வரலாற்றில் 1952- ஆம் ஆண்டு முதல் 1962 வரை டாக்டர் ராதாகிருஷ்ணன் 2-முறை துணை ஜனாதிபதியாக இருந்தார். அவரைத் தொடர்ந்து ஹமீத் அன்சாரிதான் 2-வது முறையாக துணை ஜனாதிபதியாகி உள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications