பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்... படக்கென்று விஷத்தைக் குடித்த அரவாணிகள்!

Subscribe to Oneindia Tamil

தேனி: வாலிபர்கள் தொடர்ந்து தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்ததால் வேதனை அடைந்த அரவாணிகள் 4 பேர் பூச்சி மருந்தைக் குடித்து விட்டனர். இதையடுத்து அவர்களை தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தேனி அல்லிநகரம், வள்ளி நகரில் உள்ளது ஆரோக்கியசாமி காம்பவுண்ட் என்ற இடம். இங்கு பத்துக்கும் மேற்பட்ட அரவாணிகள் வசித்து வருகின்றனர். இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் அடிக்கடி வந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கின்றனர். இவர்களின் நச்சரிப்பால் அரவாணிகள் அவதிப்பட்டு வந்தனராம்.

இவர்களின் தொல்லை குறித்து கலெக்டர், எஸ்.பி வரைக்கும் கூட போய் புகார் கொடுத்துள்ளனராம். ஆனாலும் எந்தப் பதிலும் இல்லை, வாலிபர்களின் வம்புகளுக்கும் அளவே இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு சிலர் வந்து அரவாணிகள் கனகா, ஸ்டெல்லா, தாமரை மற்றும் சுவாதியிடம் சில்மிஷம் செய்து தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த நால்வரும் பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து விட்டனர்.

இதைப் பார்த்து மற்ற அரவாணிகள் அலறினர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நான்கு அரவாணிகளையும் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நான்கு பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+