For Daily Alerts
Just In
சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, கணவர் மீது நில அபகரிப்பு வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது கீழ்வைரவன்பட்டி. இங்கு அரசுக்கு சொந்தமான கன்மாய் இடம் உள்ளது. இந்த இடத்தை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திராவும், அவரது கணவர் சந்திரசேகரும் சேர்ந்து ஆக்கிரமித்து அந்த இடத்தில் சொகுசு பங்களா கட்டியிருப்பதாகவும், மேலும் அங்கு செங்கல் சூளை நடத்தி வருவதாகவும் கூறி கமால் மைதீன் என்பவர் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் கோகுல இந்திரா மற்றும் அவரது கணவர் மீது நில அபகரி்ப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா, துரைசாமி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Comments
English summary
Land grabbing case was filed against TN tourism minister Gokula Indira and her husband.
Story first published: Wednesday, August 8, 2012, 9:10 [IST]