சிபிஐயிடம் சிக்கிய உதவியாளர் படத்தை தேசத் தலைவர்களுடன் சேர்த்த ராம்தேவ் தொண்டர்கள்

காந்தி, பகத்சிங், நேதாஜி ஆகியோரது படங்களுடன் யாருடைய படம் இணைக்கப்பட்டது தெரியுமா? உண்ணாவிரதம் இருக்கும் ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணாவின் படம்தான்!
பாலகிருஷ்ணா வேறு யாருமல்ல.. சில நாட்களுக்கு முன்பு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டவர்தான் இந்த பாலகிருஷ்ணா!
இவரைத்தான் தேசத் தலைவர்களின் படங்களுடன் இணைத்து வைத்திருக்கின்றனர். இந்த காட்சி அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பாக கண்டனக் கணைகள் குவிந்துவிட்டன.
இதனால் பாலகிருஷ்ணா படத்தை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டனர். இதுபற்றி கருத்து தெரிவித்த ராம்தேவும், பாலகிருஷ்ணா படம் வைக்கப்பட்டது தவறு. அதை சரி செய்துவிடுகிறோம். இதுபோன்ற படங்கள் இடம்பெறக்கூடாது என்று அமைப்பாளர்களிடம் தெரிவித்துள்ளேன். இதன் மூலம் போராட்டம் திசை திருப்பப்பட்டுவிடும் என்றார்.












Click it and Unblock the Notifications