சுதந்திர தினம்: அறிவாலயத்தில் கொடியேற்றம் விழா- திமுக தலைமை அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுதந்திர தினமான நாளை (ஆகஸ்ட் 15ம் தேதி) அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆகஸ்ட் 15ம் தேதி புதன்கிழமை அன்று நம் நாட்டின் விடுதலை திருநாளை முன்னிட்டு கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் காலை சரியாக 8 மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்படும்.
இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை, வடசென்னை மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் திமுக தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.












Click it and Unblock the Notifications