குதிரையைக் கூட விடாத 'கொடுங்கோலர்'!
அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு நபர், பெண் குதிரையிடம் ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்ட செயல் அனைவரையும் நடுநடுங்க வைத்துள்ளது.
தான் செய்தது தப்புதான் என்று இப்போது கன்னத்தில் அடித்துக் கொள்ளாத குறையாக கூறியுள்ளார் அந்த நபர்.
விலங்குகளிடம் மனிதர்கள் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது இயற்கைக்குப் புறம்பான ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் ஒரு வட இந்திய வாலிபர் பசு மாட்டிடம் உறவு வைத்துக் கொண்ட செயல் அனைவரையும் பதறச் செய்தது. அதேபோல அமெரிக்காவில் ஒரு பெண் குதிரையிடம் ஓரல் செக்ஸ் வைத்து சிக்கியுள்ளார் ஆண் ஒருவர்.
இந்த விபரீத மனிதருக்கு பென்சில்வேனியா கோர்ட் இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்துள்ளது. அத்துமீறி குதிரை லாயத்திற்குள் நுழைந்தது, குதிரையிடம் செக்ஸ் வைத்துக் கொண்டது என இரண்டு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டன.
அந்த நபரின் பெயர் ஜெரீமி ஜான்சன். 20 வயதாகிறது. பெர்ரி கன்ட்ரி என்ற இடத்தில் உள்ள குதிரைப் பண்ணைக்குள் கடந்த மே 2ம் தேதி அதிகாலையில் அத்துமீறி நுழைந்தார் ஜான்சன். அவர் உள்ளே புகுந்ததைப் பார்த்த பண்ணை உரிமையாளர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது பெண் குதிரை ஒன்றிடம் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் ஜான்சன்.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு முன்பும் கூட ஜான்சன் இதேபோல ஒரு குதிரையிடம் சேட்டை செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications