For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலியல் தொந்தரவு: பள்ளி மாணவி தற்கொலை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பர்ன்பூரில் பாலியல் தொந்தரவு காரணமாக பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

எட்டாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி பள்ளிக்கு சென்று வரும் போது சில இளைஞர்களால் பாலியல் ரீதியான துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

இளைஞர்களின் ஈவ் டீசிங் தொந்தரவு குறித்து சிறுமியின் பெற்றோர்களும் உள்ளூர் போலீசில் புகார் தெரித்தனர்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த மாணவி உடலில் தீவைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் பர்ன்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க அவர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

மாணவியின் தற்கொலை தொடர்பான ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

English summary
A 13-year-old schoolgirl is the latest victim of sexual harassment in West Bengal. She resorted to self immolation yesterday after her tormenters humiliated her at a reconciliation meeting in Burnpur near Asansol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X